2014-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொழும்பு தாமரைக் கோபுரம் சார்ந்ததாக நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள தாமரைக் கோபுர கடை மற்றும் களியாட்ட கட்டடத்தொகுதி - பல்பணி கோபுரம் மற்றும் களியாட்ட நிலையத்தையும் கொண்ட 350 மீற்றர் உயரமுடைய கொழும்பு தாமரைக் கோபுரம் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குறுத்துகை ஆணைக்குழுவினால் கொழும்பு 10, டி.ஆர்.விஜேவர்த்தன மாவத்தையில் நிருமாணிக்கப்பட்டு வருகின்றது. கொழும்பு தாமரைக் கோபுரத்துக்கு அண்மையிலுள்ள காணியை வானங்களை நிறுத்தி வைக்கும் தொகுதியடங்கலாக தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை நிருமாணிப்பதன் மூலம் "விநோதபூங்கா" ஒன்றாக அபிவிருத்தி செய்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளதோடு, கோபுரத்தின் கட்டமைப்பு ரீதியிலான வேலைகள் 2015 யூன் மாதம் அளவில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்போந்த நோக்கத்திற்காக அதற்கண்மையிலுள்ள காணியிலிருந்து மேலதிகமாக காணியினை பெற்றுக் கொள்வதற்காகவும் அதற்கான தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |