2014-09-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பாதரசம் தொடர்பில் மினாமாட்டா சமவாயத்தில் கைச்சாத்திடல் - நீண்டகாலமாக சுற்றாடலுக்கு பாதரசத்தை விடுவிப்பதன் காரணத்தினால் உலகளாவிய ரீதியில் மனிதனின் சுகாதாரம் மற்றும் சுற்றாடல் முறைமைகளுக்கு பிரதிகூலமான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளமை கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மேற்போந்த சமவாயத்தின் பிரதான நோக்கம் வளிக்கு நீருக்கு மற்றும் பூமிக்கு பாதரசத்தை விடுவிப்பதை குறைத்துக் கொள்வதன் மூலம் பாதரசத்தினால் ஏற்படுகின்ற பிரதிகூலமான தாக்கங்களிலிருந்து மனித சுகாதாரம் மற்றும் உலகளாவிய சுற்றாடலை பாதுகாப்பதாகும். மேற்போந்த சமவாயத்தில் கைச்சாத்திடுவதற்கு சுற்றாடல், மீள், புதுப்பித்தல் சக்தி அமைச்சர் மாண்புமிகு சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |