• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சிகளை நவீனமயப்படுத்தலும் அபிவிருத்தி சாத்தியதகவாய்வுகளை மேம்படுத்துதலும்

- இறப்பர் கைத்தொழில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் 1909 ஆம் அண்டு நிறுவப்பட்டதுடன் இது உலகத்தின் இவ்வாறான முதன்மை நிறுவனமாக இருப்பதுடன் இதன் மூலம் உலகத்தின் இறப்பர் கைத்தொழிலின் மேம்பாட்டுக்காக வழங்குகின்ற பாரிய பங்களிப்பை உலகம் பூராவும் ஏற்றுக் கொள்ளப்பட்டும் உள்ளது. நிறுவனத்தின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் நவீன ஆய்வுகூட தொகுதியொன்றை நிறுவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தேச ஆராய்ச்சி கூடத்தின் ஊடாக சிறிய தோட்ட உரிமையாளர்கள், பாரிய இறப்பர் உற்பத்தியாளர்கள், இறப்பர் சார்ந்த விற்பனை கம்பனிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்வி மான்கள் உள்ளடங்கலாக இறப்பர் துறையின் சகல தரப்பினர்களுக்கும் வசதிகளை வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்குரியதான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பெருந்தோட்டத் தொழில் அமைச்சர் மாண்புமிகு மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.