2014-09-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய விஞ்ஞான நிலையமொன்றை தாபித்தல் - புதிய தொழினுட்ப கண்டுபிடிப்பு நிலையமொன்றை நிருமாணித்தல் - நகர அபிவருத்தி அதிகாரசபையினால் நெநோ தொழினுட்பவியல் பூங்காவை நிறுவுவதற்கு 48 ஏக்கர் காணி்த் துண்டை ஹோமாகம பிட்டிபன பிரதேசத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் தேசிய விஞ்ஞான நிலையமொன்றைத் தாபிப்பதற்கான நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்டபுத்துவதற்கு பொதுதிறைசேரியினால் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்திற்காக மதிப்பிடப்பட்டுள்ள மொத்த தொகை 419 மில்லியன் ரூபா என்பதுடன் இதை 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இரண்டு கட்டங்களில் நடைமுறைப் படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விலைகளுக்கு நிருமாண, பொறியியல்சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சின் நிலையியல் தொழினுட்பக் குழுவினால் அங்கீகரிப்பித்துக் கொள்வதற்கு உட்பட்டு, இந்த ஒப்பந்தத்தை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு வழங்குவதற்காக பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |