2014-09-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஐக்கிய நாடுகளின் 2014 ஆம் ஆண்டிற்கான e-Government அபிவிருத்தி சுட்டெண்ணில் இலங்கையின் இடம் - இலங்கை ஐக்கிய நாடுகளின் 2014 ஆம் ஆண்டிற்கான e-Government அபிவிருத்தி சுட்டெண்ணுக்கு அமைவாக 192 நாடுகளுக்கிடையே 74 வது இடத்திற்கு முன்னோக்கியுள்ளது என்பதுடன் e-Government நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்துவதில் முன்னுரிமை வழங்குகின்ற நாடுகளுக்கிடையே இலங்கையும் உள்ளது. இந்த சுட்டெண்ணை தயாரிக்கப்பட்டதாவது அதன் உறுப்புபாண்மை நாடுகளின் e-Government நிலைமையை மதிப்பிடும் பொருட்டு ஐக்கிய நாடுகளினால் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின் மூலமாகும். 2014 ஆம் ஆண்டின் அறிக்கைக்கு அமைவாக இலங்கை தெற்காசியாவில் முதலாவது இடத்தில் உள்ளதுடன் இந்தியா இலங்கையை விட 44 வது இடத்திற்கு பின்னரே உள்ளது. தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மாண்புமிகு ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் இந்த தகவல் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டது. |