• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய பாதுகாப்பு தினத்தைக் கொண்டாடுதல் - 2014

- இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய விதம் தொடர்பிலும் அனர்த்தங்களை குறைத்துக் கொள்ளும் பொருட்டும் சம்பந்தப்பட வேண்டிய விதம் பற்றி பொதுமக்களை விழிப்பூட்டும் நோக்கில் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் சகல ஆண்டுகளும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதியன்று தேசிய பாதுகாப்பு தினத்தைக் கொண்டாடப்படுகின்றது. “பாதுகாப்பான இலங்கை" பிரதான தொனிப்பொருளின் கீழும் "இணைவோம் அனர்த்தங்களை தடுப்பதற்கு" எனும் உப தொனிப்பொருளின் கீழும் அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சருவதேச மாநாட்டு மண்டபத்தில் நிகழ்ச்சித்திட்ட தொடரொன்றை நடாத்துவற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எதிர்பார்க்கின்றது. இதனோடு தொடர்புபட்ட விடயங்களை மேற்கொள்வதற்கு மாண்புமிகு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.