2014-09-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் பெலோரஷ்ய குடியரசுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொண்ட இருபக்க உடன்படிக்கை - குற்றவியல் விடயங்களின் போது புரிந்துணர்வுடன் சட்ட ஒத்துழைப்பை காட்டுதல் தொடர்பிலான உடன்படிக்கையை இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களினாலும் ஏற்கனவே கைச்சாத்திடப்டப்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் மூலம் விசாரணைகளை மேற்கொள்ளல், வழங்குத் தாக்கல் செய்தல், வழக்கு விசாரணை அத்துடன் இதன் விளைவாக எழுகின்ற சட்ட நடவடிக்கை உட்பட குற்றவியல் விடயங்களின் போது புர்ந்துணர்வுடனான சட்ட ஒத்துழைப்பை வழங்கும் பொருட்டு இருநாட்டு தரப்பினர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. இதற்கமைவாக உடன்படிக்கையின் ஏற்பாடுகளை செயல்வலுப்படுத்தும் பொருட்டு நீதி அமைச்சரினால் கட்டளையொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டளைக்கு அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்தற்கு நீதி அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |