• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முன்னுரிமை அடிப்படையில் தேசிய நீர்வழங்கல், வடிகால மைப்பு சபையினால் விநியோகிக் கப்படுகின்ற குழாய்நீர் வழங்கல் சேவைகள் தழுவப்படும் பிரதேசத்தை விரிவுபடுத்துவதற்காக திறைசேரி உத்தரவாதத்துடன் உள் நாட்டு வங்கியிலிருந்து பெற்றுக் கொள்ளப்படும் நிதியத்தின் கீழ் 22 நீர் வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைபபடுத்துதல்

- நாட்டின் சகல மாவட்டங்களையும் உள்ளடக்கி உள்நாட்டு வங்கி நிதியுதவி அளிக்கின்ற 22 நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறை்பபடுத்துவற்கு நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சு துரிதமான வேலைத்திட்டமொன்றை வகுத்தமைத்துள்ளதுடன், 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதமாகும் போது அண்ணளவாக 150,000 பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நோக்கத்திற்கு இயைபான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.