2014-09-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஶ்ரீமத் அநகாரிக தர்மபால அவர்களின் 150 ஆவது ஜனன தின விழா - ஶ்ரீமத் அநகாரிக தர்மபால அவர்களின் 150 ஆவது ஜனன தின விழா 2014 செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதியன்று கொண்டாடப்படுவதுடன், அதிமேதகைய சனாதிபதியினால் இத்தினத்தை "தர்மபால தினம்" எனவும் 2014 செப்ரெம்பர் மாதம் 17 ஆம் திகதியுடன் தொடங்கும் வருடத்தை "தர்மபால வருடம்" எனவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை கொண்டாடுமுகமாக தொடர்புடைய அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய அரசாங்க நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து 2014 செப்ரெம்பர் மாதம் 17 ஆம் திகதியுடன் தொடங்கும் வருடம் முழுவதும் தொடர் நிகழ்ச்சிகளை நடாத்துவதற்காக புத்தசாசன, மத அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டீ.எம்.ஜயரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |