• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2015 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம்

2015 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - பொது திறைசேரியானது அமைச்சுக்கள், மாகாண சபைகள் உட்பட ஏனைய தரப்பினர்களுடன் வரவுசெலவுத் திட்டத்தை தயாரிப்பதற்குரியதாக கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதோடு, இதற்கமைவாக பயன்படுத்தக்கூடிய மொத்த நிதி வளத்தின் அளவினைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு மேற்போந்த கலந்துரையாடல்களின் போது இனங்காணப்பட்டுள்ள முன்னுரிமைகளின் மீது தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் அபிவிருத்திப் பணிகளை உரிய காலப்பகுதிக்குள் பூர்த்தி செய்வதற்காக முன்னுரிமை வழங்கி நடுத்தவணை கால ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு இனங்காணப்பட்டுள்ள புதிய அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 2015 - 2017 நடுத்தவணை கால வரவுசெலவுத் திட்ட கட்டமைப்பிற்குள் நிலவும் சகல வளங்களையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு வரவுசெலவுத்திட்ட நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2015 - 2017 நடுத்தவணை கால வரவுசெலவுத் திட்ட கட்டமைப்பிற்குள் 2015 ஆம் ஆண்டு சார்பில் அரசாங்கத்தின் மதிப்பிடப்பட்ட மொத்த வருமானம் 1,713 பில்லியன் ரூவாவதோடு 2015 ஆம் ஆண்டு சார்பில் அரசாங்கத்தின் மதிப்பிடப்பட்ட மொத்த செலவு 3.053 பில்லியன் ரூபாவாகும். 2015 - 2017 நடுத்தவணை கால வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டில் அடைவதற்கு எதிர்பார்க்கப்படும் நிதி குறியிலக்கு பின்வருமாறாகும்: 2014 2015 2016 2017 * அரசாங்க முதலீடு(தே.உ.உ.% ஆக) 6.0 6.5 6.5 6.5 * வரவுசெலவு பற்றாக்குறை(தே.உ.உ.% ஆக) 5.2 4.4 3.6 3.0 * மொத்த அரசகடன்(தே.உ.உ.% ஆக) 75.0 71.0 68.0 65.0 * பொருளாதார வளர்ச்சி வேகம் 7.8 8.2 8.3 8.4 * பணவீக்கம் 6.0 5.5 5.0 5.0 இது தொடர்பிலான பணிகளை நடாத்திச் செல்வதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.