2014-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் மக்கள் சீனக்குடியரசுக்கும் இடையே கைச்சாத்திடப்படும் இருதரப்பு உடன்படிக்கை - குற்றவியல் நடவடிக்கைகளின் போது பரஸ்பரம் சட்ட உதவிகளை வழங்குவது தொடர்பில் இலங்கைக்கும் மக்கள் சீனக்குடியரசுக்கும் இடையே உடன்படிக்கை மூலம் விசாரணைகளை மேற்கொள்தல், வழக்குத்தொடுத்தல், வழங்குகனை விசாரித்தல் இவற்றின் பெறுபேறாக உருவாகும் சட்ட நடவடிக்கைகள் அடங்கலாக குற்றவியல் விடயங்களின் போது பரஸ்பர சட்ட ஒத்தாசையை வழங்குவதற்காக இரு தரப்பினருக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேற்போந்த உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கும் செயல்வலுவாக்கம் அளிக்கும் பொருட்டும் நீதி அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |