2014-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொழும்பு மாவட்ட கிழக்கு நகரங்களுக்கான நீர்வழங்கல் கருத்திட்டம் - கட்டம் I ஐ செயற்படுத்துதல், பெந்தோட்டை நீர் வழங்கல் கருத்திட்டத்தை செயற்படுத்துதல் - உள்நாட்டு வங்கிகளிலிருந்து வழங்கப்படும் நிதி உதவியுடன் 10.095 பில்லியன் செலவில் 34 நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பின்வரும் நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு வங்கிக்கடன் வசதிகளை பெறுவதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |