• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் தொழினுட்ப நிறுவனத்தை அபிவிருத்தி செய்தலும் வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்குமான கருத்திட்டம்

- இந்தக் கருத்திட்டத்தின் நோக்கமாவது மொறட்டுவை பல்கலைக்கழகத்தினுள் தாபிக்கப்பட்டுள்ள தொழினுட்ப நிறுவன மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் தேசிய மற்றும் சருவதேச ரீதியில் பாரிய கேள்வியுடனான தேசிய தொழினுட்ப டிப்ளோமா பாடநெறியை அபிவிருத்தி செய்து இதற்காக கூடிய அளவில் மாணவர்களை இணைத்துக் கொள்ளவதற்கு இயலுமாகும் வகையில் அதனை விரிவுபடுத்துவதாகும். அதேபோன்று இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் 2015 ஆம் ஆண்டிலிருந்து பல்கலைக் கழகங்களுக்கு உள்வாங்கப்படுவதற்கு எதிர்பார்ககப்படும் தொழினுட்ப பாடப்பிரிவு மாணவர்களுக்கும் இந்த பாடநெறிக்கான வசதிகளை செய்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் இதுசார்ந்த தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.