2014-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியளித்தலின் மீது நடைமுறைப் படுத்தப்படும் பாரிய கொழும்பு கழிவு நீர் முகாமைத்துவக் கருத் திட்டம் - வடிவமைத்தல் மற்றும் மேற்பார்வை மதியுரை சார்பில் வடிவமைத்தல், மேற்பார்வை செய்தல் அத்துடன் முகாமைத்துவம் என்பவற்றிற்கான மதியுரைச் சேவை ஒப்பந்தத்தின் கீழ் மேலதிக வேலைகள் - கழிவுநீர் முறைமையை புனரமைப்பதன் மூலம் நகர சுற்றாடலை விருத்தி செய்வதற்கும் இதன் மூலம் பாரிய கொழும்பு பிரதேசத்தில் வதிந்துள்ளவர்களின் பொது சுகாதார வசதிகளை விரிவுபடுத்துவதற்குமாக பாரிய கொழும்பு கழிவுநீர் முகாமைத்துவக் கருத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 116.63 மில்லியன் யு.எஸ்.டொலர்கள் கொண்ட கடன் தொகை இலங்கை அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரை சேவை கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் மேற்போந்த நோக்கத்திற்கான மேலதிக மதியுரை சேவையை வழங்குவதற்காக உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் மாண்புமிகு ஏ.எல்.எம்.அதாவுல்லா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |