2014-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கைக்கும் சீசெல்ஸ் குடியரசிற்குமிடையே விளையாட்டுத்துறை மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல் - விளையாட்டுத்துறையின் மேம்பாட்டிற்காக இருநாடுகளுக்குமிடையில் மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |