2014-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வரட்சியால் பயிர்ச்செய்கை பாதிப்படைந்த விவசாயிகளுக்கு விதை நெல் வழங்குதல் - இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து நிலவிய நீண்ட வரட்சி நிலைமை காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, அடுத்த பெரும்போகத்தில் பயிச்செய்கை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்குப் போதுமான விதை நெல் கொள்வனவு செய்யும் பிரச்சினைக்கு கமக்காரர்கள் முகம் கொடுத்துள்ளமை கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வரட்சிக்கு முகம்கொடுப்பதற்காக கமத்தொழில் திணைக்களத்தினால் விதை நெல் உற்பத்தி செய்யும் கமக்காரர்களிடமிருந்தும் தனியார்துறையைச் சேர்ந்த விதை நெல் உற்பத்தியாளர்களிடமிருந்தும் விதை நெல் கொள்வனவு செய்து செலவுகளை ஈடுசெய்யும் அடிப்படையில் வரட்சியினால் பாதிக்கப்பட்ட கமக்காரர்களிடையில் விநியோகிப்பதற்காக கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |