• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றங்கள் பற்றிய கட்டமைக்கப்பட்ட சமவாயத்தின் காலநிலை தொழினுட்ப நிலையம் வலயமைப்பு சார்பில் தேசிய தத்துவம்பெற்ற நிறுவனமொன்றை பெயர் குறித்து நியமித்தல்

- உலகளாவிய நிலைபேறுடைய அபிவிருத்திக்கும் வறுமையை ஒழிப்பதற்கும் இடையூறாகவிருக்கும் முக்கிய சுற்றாடல் பிரச்சினையாக காலநிலை மாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளது. காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முகம்கொடுக்கும் நோக்கில் தொழினுட்பக் கருத்திட்டங்கள் உட்பட திறமுறைகளைத் தயாரிப்பதற்கும் செயற்படுத்துவதற்கான வசதிகளை வழங்குவதற்கும் தொழினுட்ப தேவைகளை கண்டறிவதற்குமான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதத்தில் காலநிலை தொழினுட்ப நிலையம் மற்றும் வலையமைப்பை அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு சேவைகளை வழங்கி காலநிலை தொழினுட்ப மற்றும் வலையமைப்பு நிலையத்திற்கான தேசிய தத்துவம் பெற்ற நிறுவனமாக சுற்றாடல், மீள் புதுப்பித்தல் சக்தி அமைச்சை பெயர் குறிக்கும் பொருட்டு சுற்றாடல், மீள் புதுப்பித்தல் சக்தி அமைச்சர் மாண்புமிகு சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.