2014-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையின் சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் ரஷ்ய கூட்டாட்சிக் குமிடையே வர்த்தக, பொருளாதார, விஞ்ஞான, மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்புத் தொடர்பில் அரசாங்கங்களுக்கிடையிலான ஆணைக் குழுவினை தாபிப்பது தொடர்பிலான உடன்படிக்கை - இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான இருபக்க வர்த்தகம் பலவருட காலமாக விருத்தியடைந்து வருகின்றது. 2001 ஆம் ஆண்டில் 11.6 மில்லியன் யு.எஸ்.டொலர்களாக இருந்த ரஷ்யாவிற்கான இலங்கையின் ஏற்றுமதியானது 2013 ஆம் ஆண்டில் 279.91 மில்லியன் யு.எஸ்.டொலர்கள் வரை அதிகரித்துள்ளதோடு, இதே காலப்பகுதியில் இலங்கையினால் ரஷ்யாவிலிருந்து செய்யப்படும் இறக்குமதியானது 3.7 மில்லியன் யு.எஸ்.டொலர்கள் 145.85 மில்லியன் யு.எஸ்.டொலர்களாக அதிகரித்துள்ளது. வர்த்தக, பொருளாதார, விஞ்ஞான, மற்றும் தொழினுட்ப துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பினை விரிவுபடுத்தும் பொருட்டு இந்த துறைகள் சார்பில் அரசாங்களுக்கு இடையிலான ஆணைக்குழுவொன்றை தாபிப்பது தொடர்பிலான உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்காக கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு அப்துல் றிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |