• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆனமடுவ இணைந்த நீர் வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்

- உத்தேச ஆனமடுவ இணைந்த நீர் வழங்கல் கருத்திட்டத்தின் மூலம் புத்தளம் மாவட்டத்தில் சுமார் 81,700 பேர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும். இந்த கருத்திட்டத்திற்கு இங்கினிமிட்டிய நீர் தேக்கத்தில் புதிய நீர் உள்வாங்கும் பிரதேசமொன்றை நிருமாணித்தல், பூரணமான நீர் சுத்திகரிப்பு நிலையமொன்றை நிருமாணித்தல் 62 கிலோ மீற்றர் நீண்ட அணுப்பீட்டு பிரதான குழாய்களைப் பதித்தல், 328 கிலோ மீற்றர் நீண்ட அணுப்பீட்டு முறைமையை நிருமாணித்தல் உட்பட இவற்றுக்குரிய வேலைகளும் உள்ளடங்கும். இந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.