2014-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கைக்கும் ரஷ்ய கூட்டாச்சி அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்படைத்தல் பற்றிய உடன்படிக்கை - நாட்டில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு ரஷ்யாவின் பாதுகாப்பினைக் கோரிய ஆட்களுக்கு குற்றவியல் வழக்குகளைத் தொடுப்பதற்கும் தண்டனைகளை வழங்குவதற்குமாக அவர்களை ஒப்படைக்குமாறு இலங்கை அரசாங்கத்தினால் கோரிக்கை விடுப்பதற்கு இதனூடாக வாய்ப்புக் கிடைக்குமென்பதால், ரஷ்ய கூட்டாச்சியுடன் இத்தகைய உடன்படிக்கையொன்றை செய்து கொள்வது இலங்கைக்குப் பயனுள்ளதென கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இருநாடுகளுக்கும் இடையில் மேற்போந்த உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்காக பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக் கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |