2014-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மல்லாவி பொலிஸ் நிலையத்திற்கு புதிய கட்டடமொன்றை நிருமாணித்தல் - மல்லாவி பொலிஸ் நிலையத்தின் மூலம் இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளும் 23 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தழுவப்படுவதோடு, இதன் மூலம் 14,711 பேர்களுக்கு சேவை வழங்கப்படும். இந்த பொலிஸ் நிலையத்திற்கான புதிய கட்டடமொன்றை நிருமாணிப்பதற்குரிய பணிகளை மேற்கொள்வதற்காக சட்டம் ஒழுங்கு பற்றிய அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |