• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிழக்கு மாகாண நீர்வழங்கல் கருத்திட்டம் - கொண்டவட்டவான், பங்காளவாடி, கல்முனை, இரக்காமம், பொத்துவில், உகன, தமன, ஹிங்குரன ஆகிய பம்பு நிலையங்கள் மஹாஓயா மற்றும் தெஹியத்தகண்டிய நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உட்பட நீர் எடுத்துச் செல்லும் பிரதேசம் ஆகியவற்றுக்கு குழாய்கள், இயந்திரங்கள், மின்னனு உபகரணங்கள், கருவிகள், உதிரிப் பாகங்கள் வழங்கிப் பொருத்துதல்

- யப்பான் சருவதேச ஒத்துழைப்பிற்கான நிறுவனத்தினாலும் இலங்கை அரசாங்கத்தினாலும் வழங்கப்படும் நிதியங்களின் மூலம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் கிழக்கு மாகாணத்தில் நீர் வழங்கல் அபிவிருத்திக் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இந்த கருத்திட்டத்தின் கீழ் 16 பிரதான ஒப்பந்த பொதிகள் உள்ளதோடு, இது சகல இயந்திர மற்றும் மின்சார நிருமாணிப்புகளை தழுவும் பத்தாவது ஒப்பந்தபொதியாகும். அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.