• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெரும்பாக மாத்தளை நீர் வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

- உத்தேச கருத்திட்டத்தின் மூலம் மாத்தளை, உக்குவெல, ரத்தொட்ட, நாவுல. யட்டவத்த, பல்லேபொல ஆகிய பிரதேசங்கள் உட்பட அம்பன்கங்க கோரளை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வீடுகள், பொருளாதார நிலையங்கள், கைத்தொழிற்சாலைகள் அடங்கலாக மாத்தளை மாவட்டத்தின் நகர பகுதி மக்களின் சுமார் 80 சதவீதமானோருக்கு நேரடியாக நலன்கள் கிடைப்பதோடு, இதன் மூலம் சுமார் 400,000 பொது மக்களுடனான 260 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இதன் மூலம் தழுவப்படுகின்றது. இந்தக் கருத்திட்டத்திற்குரிய தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.