2014-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வடமத்திய மாகாண கால்வாய் கருத்திட்டத்தின் கீழ் காலிங்கநுவர / அங்கமெடில்ல / மின்னேரியா நீர் இறைத்தல் கருத்திட்டம் - கொத்மலை உயர் நீரேந்து பிரதேசத்திலிருந்து ஆரம்பிக்கும் நீர் வழி தற்போது பொல்கொல்ல மகாவலி நீர் திசை திருப்பல் ஊடாக அநுராதபுரம், பொலன்னறுவை ஆகிய பிரதான கமத்தொழில் மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது. நாட்டில் உருவாகக் கூடிய காலநிலை மாற்றங்கள் பற்றி கவனத்திற்கு எடுத்துக் கொண்டு கமத்தொழிலுக்கும் அதேபோன்று குடிநீருக்காகவும் பயன்படுத்தக்கூடிய விதத்தில் மீ ஓயா, ஹக்வடுனா ஓயா நீரேந்து பிரதேசங்கள் ஊடாக மகாவலி நீரை வடமேல் மாகாணத்திற்கும் வடமத்திய வவுனியா பிரதேசம் வரையும் விநியோகிப்பதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்தியக் கம்பனியொன்றினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த பிரேரிப்புத் தொடர்பில் கருத்திட்டக் குழுவொன்றை நியமிப்பதற்காகவும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சர் மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |