2014-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் சீசெல்ஸ் குடியரசிற்கும் இடையே கலாசார மற்றும் கலைகள் விவகாரம் தொடர்பிலான ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கை - இருநாடுகளிலும் அமுலிலுள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக ஒவ்வொருவரினதும் தன்னாதிக்கத்திற்கு பரஸ்பரம் மதிப்பளிக்கும் அடிப்படையில் இருநாடுகளுக்கும் இடையில் கலாசார ஒத்துழைப்பினை மேம்படுத்தும் பொருட்டு இலங்கை அரசாங்கத்திற்கும் சீசெல்ஸ் குடியரசிற்கும் இடையில் மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்காக கலாசாரம், கலைகள் விவகார அமைச்சர் மாண்புமிகு ரீ.பீ.ஏக்கநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |