2014-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உள்நாட்டு வங்கிக் கடன்களைப் பயன்படுத்தி முன்னுரிமை நீர் வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் - உள்நாட்டு வங்கிகளினால் வழங்கப்படவுள்ள நிதியங்களிலிருந்து ருகுணுபுர விநியோக நீர் வழங்கல் கருத்திட்டம், அம்பாறை விநியோக நீர் வழங்கல் கருத்திட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்காகவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு அத்தகைய வங்கிகளுடன் உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதற்குமாக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |