• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கு உரியதாக அதிமேதகைய சனாதிபதியின் விசேட பிரதிநிதியாக 2014 யூன் 29 - யூலை 05 ஆம் திகதி வரை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு பசில் ராஜபக்ஷ அவர்கள் மக்கள் சீனக் குடியரசுக்கு மேற்கொண்ட விஜயம்

- பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு பசில் ராஜபக்ஷ அவர்களினால் மேற்போந்த விஜயம் சம்பந்தமாக வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைவாக இலங்கைக்கும் மக்கள் சீன குடியரசிற்குமிடையில் பிரேரிக்கப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை துரிதப்படுத்துவது பற்றியும் வர்த்த மற்றும் சுற்றுலாத் துறையின் ஒத்துழைப்பினை அதிகரித்துக் கொள்வதற்கும் அதேபோன்று இலங்கையில் முதலீடு செய்வதற்கு சீனக் கம்பனிகளை ஊக்குவிப்பதற்கும் விசேட கவனம் செலுத்தி இருநாடுகளுக்கிடையில் இருபக்க உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மக்கள் சீனக் குடியரசின் தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளர் எனவும் அங்கு திருப்திகரமான முன்னேற்றம் அமைச்சரினால் எய்தப்பட்டுள்ளமையும் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மக்கள் சீனக் குடியரசின் சனாதிபதி அதிமேதகைய ஷீ ஜின்பின் அவர்கள் எதிர்வரும் தினங்களில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை பற்றியும் இந்த விஜயம் மக்கள் சீனக் குடியரசின் அரச தலைவர் ஒருவர் இலங்சைகக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமொன்றெனவும் அமைச்சரவையினால் மேலும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.