• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஜேர்மன் அரசாங்கத்தின் கொடையொன்றாக இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தை கிளிநொச்சி மாவட்டத்தில் தாபித்தல்

- இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சுக்கு சொந்தமான தேசிய பயிலுநர், தொழினுட்ப பயிற்சி அதிகாரசபையின் கீழ் இயங்கும் முழுமையான பயிற்சி நிறுவனமொன்றாக இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தை கிளிநொச்சி மாவட்டத்தில் தாபிப்பதற்கான கருத்திட்டம் தொடர்பில் ஜேர்மன் பெடரல் அரசாங்கத்தினால் இலங்கை அரசாங்கத்துடன் ஏற்கனவே உடன்படிக்கை யொன்றை செய்து கொண்டுள்ளது. 700 மில்லியன் ரூபாவைக் கொண்ட (அண்ணளவாக 04 மில்லியன் யூரோக்கள்) செலவில் இந்த நிறுவனத்தின் நிருமாணிப்பு வேலைகள் 2014 ஒக்றோபர் மாதத்தில் ஆரம்பித்து 2015 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யப்படவுள்ளது. இதற்குரிய தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு டலஸ் அழகப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.