• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறிய பெருந்தோட்ட தொழில்முயற்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டதை நடைமுறைப்படுத்துகின்ற காலப் பகுதியை நீடித்தல்

- கமத்தொழில் அபிவிருத்திக்கான சருவதேச நிதியத்தின் மூலம் வழங்கப்படும் கடன் உதவியின் கீழ் பெருந்தோட்டத் தொழில் அமைச்சினால் இந்த நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மொனராகலை மாவட்டத்தில் புதிய இறப்பர் செய்கைக்கு 5,087 ஹெக்டயர்களும் நாட்டின் மத்திய பிரதேசத்தில் தேயிலையை மீண்டும் பயிர் செய்வதற்காக 157 ஹெக்டயர்களும் சேர்த்துக் கொண்டு இந்தக் கருத்திட்டம் குறிப்பிட்ட மட்டத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது. வருமானம் ஈட்டும் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பினை வழங்கி இந்தக் கருத்திட்டத்தின் மூலம் மொனராகலை மாவட்டத்திற்குள் 164 கிராமிய இறப்பர் அபிவிருத்தி கொத்தனிகளும் 241 தொழில்முயற்சிக் குழுக்களும் தாபிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 18,000 சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்கள் இதில் நேரடியாக நன்மை பெறுவர். கமத்தொழில் அபிவிருத்திக்கான சருவதேச நிதியத்தினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் காலப் பகுதியை 2016‑12‑31 ஆம் திகதிவரை நீடிப்பதற்காக பெருந்தோட்டத் தொழில் அமைச்சர் மாண்புமிகு மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.