2014-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்காக வீடமைப்புத் தொகுதியொன்றை நிருமாணிப்பதற்கு கல்கிஸ்சையில் உள்ள அரசாங்க காணியை உடைமையாக்குதல் - முன்விற்பனை அடிப்படையில் நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 60 வீட்டு அலகுககளைக் கொண்ட 12 மாடிக் கட்டடமொன்றை நிருமாணிக்கும் பொருட்டு கல்கிஸ்சை நீதிமன்ற மனையிடத்திற்கு அருகாமையிலுள்ள றூட் 02, பேர்ச்சர் 07 விஸ்தீரனமுடைய அரசாங்க காணித் துண்டொன்றை உடைமையாக்கிக் கொள்வதற்காக பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |