• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2015 தெயட்டகிருள - தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்

- "தெயட்ட கிருள" நிகழ்ச்சித்திட்டம் திறமுறை ரீதியில் செய்யப்பட்ட அத்துடன் குறியிலக்கு கொண்ட அரசாங்கத்தின் வலய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை மக்களுக்கு கிடைக்கக் கூடிய விததத்தில் சுதந்திர தின வைபவத்திற்கு ஒருங்கிணைவாக நாட்டின் சில மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படுவதோடு, இதன் ஊடாக பிரதான அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களின் மூலம் உள்ளடக்கப்படாத அபிவிருத்தி தேவைகளை நிறைவேற்றுவதும் அதேபோன்று மக்கள் முகம்கொடுக்கும் நிறுவன ரீதியிலான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதும் ஆகும். 2015 தெயட்ட கிருள நிகழ்ச்சித்திட்டம் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. தெயட்ட கிருள கண்காட்சி, தெயட்ட கிருள நிகழ்ச்சித்திட்டம் என்பன 2015 சுதந்திரதின விழாவுக்கு ஒருங்கிணைவாக மாத்தறை கம்புறுபிட்டிய கொட்டவிலவத்த மற்றும் மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ கல்லூரி மனையிடங்களில் நடாத்தப்படும் இதற்குரியதான தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.