2014-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
A 5 வீதியின் பதுளையிலிருந்து செங்கலடி வரை புனரமைத்தல் - பேராதனை - பதுளை - செங்கலடி வீதியானது கிழக்கு மாகாணத்தையும் மத்திய மாகாணத்தையும் இணைக்கும் பிரதான நெடுஞ்சாலைகளில் ஒன்றாகும். இதில் பேராதனையிலிருந்து பதுளை வரையிலான வீதிப்பகுதி ஏற்கனவே புனரமைக்கப்பட்டுள்ளது. 151.3 கிலோ மீற்றர் நீண்ட பதுளை - செங்கலடி வரையிலான மீதி வீதிப் பகுதியை 140 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் அபிவிருத்தி செய்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்திற்கு சருவதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிறுவனத்தினாலும் அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தினாலும் கூட்டாக நிதி வழங்கப்படவுள்ளதோடு, மீதித்தொகை இலங்கை அரசாங்கத்தினால் வகிக்கப்படவுள்ளது. முதலில் சருவதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிறுவனத்துடன் கடன் உடன்படிக்கையொன்றை செய்துகொள்வதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |