2014-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை மின்சார தனியார் கம்பனியினால் பராமரிக்கப்படும் அனுப்பீட்டு முறைமையின் ஆற்றலை மேம்படுத்துதல் - நீர்கொழும்பிலிருந்து காலிவரை பரந்துள்ள நாட்டின் மேற்கு கரையோரப் பிரதேசத்தின் மின்சார அனுப்பீட்டு வலையமைப்பு 31 மொத்த துணை நெய்யரி நிலையங்களின் ஊடாக Lanka Electricity Company நிறுவனம் கட்டுப்படுத்துகின்றது Lanka Electricity Company நிறுவனத்தினால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் மூலம் நிதியளிக்கப்படும் தூய சக்தி, மேம்பாட்டு கருத்திட்டத்தின் கீழ் கட்டுநாயக்கா, கொட்டிகாவத்த, கிரிபத்கொட, நாவல, ஹிக்கடுவ ஆகிய பிரதேசங்களில் 33/11 கிலோ வொட் கொண்ட ஐந்து (05) துணை நெய்யரி நிலையங்கள் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளன. இந்த அனுப்பீட்டு முறைமையின் ஆற்றலை மேம்படுத்துவது தொடர்பிலான தொடர் நடவடிக்கைகளை நடாத்திச் செல்வதற்காக மின்வலு, சக்தி அமைச்சர் மாண்புமிகு (திருமதி) பவித்திரா வன்னிஆரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |