2014-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் கீழ் தேசிய சிறுவர் ஆலோசனை நிலையமொன்றையும் தேசிய சிறுவர் பாதுகாப்பு இல்லமொன்றையும் தாபித்தல் - சிறுவர் துஷ்பிரயோகம் உட்பட வேறு விதத்திலான வன்முறைகளுக்கு ஆளானவர்களுக்கு குறித்த நீதிமன்ற செயற்பாடுகள் முடிவுறும் வரை தங்குமிட வசதிகளை வழங்கும் நோக்கில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் கீழ் தேசிய சிறுவர் ஆலோசனை நிலையமொன்றையும் தேசிய சிறுவர் பாதுகாப்பு இல்லமொன்றையும் தாபிப்பதற்குரியதான தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார அமைச்சர் மாண்புமிகு திஸ்ஸ கரலியத்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |