• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் சுற்றுலாத்துறையை விருத்தி செய்வதற்காக புதிய தாவரவியல் பூங்காக்களைத் தாபித்தலும் தற்போதுள்ள பூங்காக்களின் வசதிகளை மேம்படுத்துதலும்

- இலங்கையில் தாவரவியல் பூங்காக்களை கண்டு களிப்பதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமானளவு அதிகரித்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டில் இதன் மூலம் கிடைத்த வருமானம் 416.5 மில்லியன் ரூபாவாதோடு, 2014 ஆரம்ப ஐந்து (05) மாதங்களுக்கு இதன் மூலம் கிடைத்த வருமானம் 219.8 மில்லியன் ரூபாவாகும். பின்வரும் கருத்திட்டங்களுக்குரிய தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தாவரவியல் பூங்கா, பொதுப் பொழுதுபோக்கு அமைச்சர் மாண்புமிகு ஜயரத்ன ஹேரத் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* 2014 செம்ரெம்பர் மாதம் திறக்கப்படவுள்ள அவிசாவளை புதிய ஈரவலய தாவரவியல் பூங்காவிற்குரிய பணிகள்;

* அம்பாந்தோட்டை, மிரிஜ்ஜவெல தாவரவியல் பூங்காவின் இரண்டாம் கட்டத்தின் கீழ் மீதி நிலப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்தல்; அத்துடன்

* ஹக்கல தாவரவியல் பூங்காவிற்குரிய பணிகள்.