• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஜனசெவன தேசிய வீடமைப்பு, குடியிருப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் - உள்நாட்டு முதலீட்டாளர்களுடன் வீடமைப்பு கருத்திட்டத்தை ஆரம்பித்தல் - குண்டசாலை பிரதேச செயலகப் பிரிவின் பல்லேகலேவத்த, பல்லேகலே

- எற்கனவே வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகளை வழங்கும் நோக்கில் உள்நாட்டு தனியார்துறை முதலீட்டாளர்களுடன் இணைந்து ஜனசெவன தேசிய வீடமைப்பு, குடியிருப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணிகளில் வீடமைப்புக் கருத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை திட்டமிட்டுள்ளது. இதற்கமைவாக, குண்டசாலை பல்லேகலே வத்த வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குரியதான தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக நிருமாண, பொறியியல்சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சர் மாண்புமிகு விமல் வீரவங்ச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .