• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுகாதாரத் துறையின் அபிவிருத்திக்காக மாலைதீவு குடியரசின் அரசாங்கத்திற்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை

- பின்வரும் நோக்கங்களுக்காக மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதற்காக சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு (02) பிரேரிப்புகளுக்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது :

* மாலைதீவு சுகாதாரத்துறை மனித வளத்தின் ஆற்றலை மேம்படுத்துவதற்காகவும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களின் கொள்வனவுக்காகவும் மாலைதீவு அரசாங்கத்திற்கு ஒத்தாசை நல்குதல்; அத்துடன்

* மாலைதீவு தாதி உத்தியோகத்தர்களினதும் சுகாதார நலன்பேண் உத்தியோகத்தர்களினதும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை இலங்கையில் நடாத்துவதன் மூலம் சுகாதார நலம்பேண் துறைக்கு பங்களிப்பு வழங்குதல்.