2014-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2015 பெப்பரவரி மாதம் 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள 67 ஆவது சுதந்திர தின விழா - 2015 பெப்பரவரி மாதம் 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள 67 ஆவது சுதந்திர தின விழாவுக்குரிய நிகழ்ச்சித் திட்டத்தை தயாரிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதற்குமாக பிரதம அமைச்சரும் புத்தசாசன, மத அலுவல்கள் அமைச்சருமான மாண்புமிகு டீ.எம்.ஜயரத்ன அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் சில அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களைக் கொண்ட அமைச்சர்கள் குழுவொன்றை நியமிப்பதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டபிள்யு.டீ.ஜே.செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |