- நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் பின்வரும் இரண்டு கருத்திட்டங்களை கேகாலை நகரத்தில் துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு இனங்கண்டுள்ளது:
* கேகாலையில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட சுதந்திர மாவத்தைக்கு முன்பக்கமாக அமைந்துள்ள வெற்றுக் காணியில் சுப்பர் மார்க்கெற் கட்டடத்தொகுதியொன்றை நிருமாணித்தல்.
இந்த வர்த்தகக் கட்டடத்தொகுதியிலுள்ள கடை அறைகளை முன் விற்பனையின் மூலம் கருத்திட்டத்திற்கான நிதியளிக்கப்படவுள்ளதோடு, இதன் நிருமாணிப்புகள் மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகத்திற்குக் கையளிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.
* கேகாலை நகர மத்தியில் ஏற்கனவேயுள்ள பஸ் டிப்போவை நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் இனங்காணப்பட்டுள்ள பரகம்மன பிரதேசத்திலுள்ள காணிக்குக் கொண்டு செல்தல்.
இந்தக் கருத்திட்டத்திற்கு 428.0 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாடு ஏற்கனவே பொது திறைசேரியினால் குறித்தொதுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய காணியின் கால்வாய்முறைமையை விருத்தி செய்தல் உட்பட காணி மீட்பு என்பவற்றை இலங்கை காணி மீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு கையளிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.