• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சீசெல்ஸ்சுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயம்

- சீசெல்ஸ் சனாதிபதி அவர்களினால் செய்யப்பட்ட அழைப்பின் பேரில் அதிமேதகைய சனாதிபதி அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் பிரதிநிதிகள் குழுவொன்று அண்மையில் சீசெல்ஸ்சுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டது. பரஸ்பரம் முக்கியமான இருபக்க , வலய மற்றும் சர்வதேச விடயங்கள் பற்றி பிரதிநிதிகள் குழுமட்டத்தில் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் பின்னர் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் விரவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், இந்துசமுத்திர தீவுகளில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் சீசெல்ஸ் அரசு செயற்பாட்டு உறுப்பினராகவுள்ள வெனிலா தீவுகள் அமைப்பில் உறுப்பாண்மையைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை சமர்ப்பித்துள்ள விண்ணப்பம் சம்பந்தமாக தமது நாட்டின் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக சீசெல்ஸ் அரசின் அதிமேதகைய சனாதிபதி உறுதியளித்துள்ளார். தலைவர்கள் இருவரினாலும் மேற்கொள்ளப்பட்ட இருபக்க கலந்துரையாடல்களின் பின்னர் இலங்கை தூதரகம், இலங்கை வங்கி, அத்துடன் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் கிளைகள் தலைவர்கள் இருவரினாலும் கூட்டாகத் திறந்து வைக்கப்பட்டன. மேற்போந்த தகவல்கள் வெளிவிவகார அமைச்சர் மாண்புமிகு (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ் அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்ட வெளிவிவகார அமைச்சின் விடயநோக்கெல்லைக்குள் வரும் பின்வரும் உடன்படிக்கைகளுக்கு அமைச்சரவையின் தழுவு அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* இலங்கைக்கும் சீசெல்ஸ்சுக்கும் இடையில் ஒத்துழைப்பு பற்றிய கூட்டு ஆணைக்குழுவொன்றைத் தாபித்தல்; அத்துடன்

* இருபக்க அரசியல் ஆலோசனை பற்றிய உடன்படிக்கை.