• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"ஆசியாவில் தெரிவு செய்யப்பட்ட நாடுகளில் நீர் முகாமைத்துவம் மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றமடைதல் தொடர்பிலான நிறுவனங்களின் ஆற்றல் அபிவிருத்தி” சார்பில் உதவித் தொகைகளைப் பெற்றுக் கொள்வதற்காக பேராதனைப் பல்கலைக்கழகத் திற்கும் அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான நோர்வே முகவராண்மைக்கும் இடையிலான உடன்படிக்கை

- அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான நோர்வே முகவராண்மையினால் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் வடக்கு - தெற்று ஒத்துழைப்பினை மேம்படுத்தும் பொருட்டிலான நிகழ்ச்சித் திட்டமொன்றை 2013 ஆம் ஆண்டில் ஆரம்பித்துள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் ஆற்றலைப் பலப்படுத்துவது இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும். நீர் மற்றும் சுற்றாடல் பொறியியல் பற்றிய பட்டப்பின்படிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் 2013 ஆம் ஆண்டில் நிதி வழங்குவதற்கு பேராதனை பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, இதற்கமைவாக நோர்வே முகவராண்மைக்கும் பேராதனை பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதற்காக வழங்கப்படும் கொடைகளின் 37 சதவீதம் (நோர்வே குரோனர் 6,730,482) உள்நாட்டு வெளிநாட்டு புலமைபரிசில் / மேலதிக புலமைபரிசில் 65 பேராதனை பல்கலைக்கழகத்தினாலும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தினாலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் பிரேரிக்கப்பட்டுள்ளவாறு மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கும் அதற்குரிய தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.