2014-07-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கண்டி நகர அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் காணிகளை உடைமையாக்குதல் - முன்னர் போகம்பர மறியற்சாலையாக உபயோகப்படுத்திய அஹலேபொல வலவ்வயை கலாசார நிலையமொன்றாகவும் நகர வசதிகள் நிலையமொன்றாகவும் மீளமைக்கும் பொருட்டிலான வேலைகள் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஹெக்டயார் 0.3866 விஸ்தீரனமுடைய இந்தக் காணியை கண்டி நகர அபிவிருத்திக் கருத்திட்டத்திற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்குவதற்காக பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |