2014-07-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை காணி மீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபன சட்டத்தைத் திருத்துதல் - சட்டவிரோதமான காணி மீட்பு அல்லது அபிவிருத்தி நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு உரிய அதிகாரமுள்ள நீதிமன்றம் ஒன்றின் மூலம் இடைக்கால உத்தரவொன்றை விதித்தல், அத்தகைய நோக்கங்களில் ஈடுபடும் ஆட்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பொலிசாரின் கூடிய ஒத்தாசையைப் பெற்றுக் கொள்ளல், அத்தகையோரை உபகரணங்கள் உட்பட வாகனங்களுடன் கைது செய்தல், அத்தகையோரையும் உபகரணங்களையும் நீதிமன்றத்தில் ஆற்றுப்படுத்தல் போன்றவற்றுக்காக மேற்போந்த சட்டத்தில் சிலபிரிவுகளை திருத்தும் பொருட்டு சட்டவரைநருக்கு அறிவுறுத்துவதற்காக பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |