• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பேராதனை, களனி, வயம்ப, மொறட்டுவ ஆகிய பல்கலைக்கழகங்களில் நிருமாணிக்கப்படும் கட்டடங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்குதல்

- மேற்போந்த பல்கலைக்கழகங்களுக்கு உரியதான பின்வரும் நிருமாணிப்புக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* பேராதெனிய பல்கலைக்கழகம்
(i) பல்மருத்துவ பீடத்திற்கான ஐந்து (05) மாடி கட்டடத்தொகுதி நிருமாணிப்பு

* களனி பல்கலைக்கழகம்
(i) தகவல் தொலைத்தொடர்புகள் தொழினுட்ப நிலையத்திற்கான கட்டட நிருமாணிப்பு

* இலங்கை வயம்ப பல்கலைக்கழகம் - குளியாப்பிட்டி
(i) தூயவிஞ்ஞான பீட கட்டட நிருமாணிப்பு

* மொரட்டுவ பல்கலைக்கழகம்
(i) கட்டடக்கலை பீடத்திற்கான கேட்போர்கூட கட்டட நிருமாணிப்பு
(ii) பொறியியல் பீடத்திற்கான பல்பணி கட்டட நிருமாணிப்பு