• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை தெற்கு அதிவேக பாதையை நீடித்தலும் வடக்கு அதிவேக பாதை நிருமாணிப்புக்காக பிரேரிக்கப்பட்டுள்ள கருத்திட்டத்திற்கான சுவீகரிப்புகளுக்கு நட்டஈடு செலுத்துதல்

- தெற்கு அதிவேக பாதையை மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை நீடிப்பதற்கும் வடக்கு அதிவேகப்பாதையை நிருமாணிப்பதற்கும் காணிகளைச் சுவீகரிக்கும் போது பாதிப்புக்குள்ளான தரப்பினர்களுக்கு நட்டஈடு செலுத்துவதற்கு 2014‑05‑30 ஆம் திகதியிடப்பட்டதும் 1864/54 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள "காணி சுவீகரித்தல் (நட்டஈடு செலுத்துதல்) ஒழுங்குவிதிகள் - 2013” இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளை பயன்படுத்துவதற்கு காணி, காணி அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு ஜனக்க பண்டார தென்னக்கோன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.