2014-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஆசிய பசுபிக் அஞ்சல் சங்கத்தின் (APPA) 2014 ஆம் ஆண்டிற்கான நிறைவேற்றுக் குழு கூட்டத்தை இலங்கையில் நடாத்துதல் - 2014 செப்ரெம்பர் 15-19 - 32 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட சுமார் 150 முகவர்கள் கலந்து கொள்ளவுள்ள மேற்போந்த கூட்டம் 2014 செப்ரெம்பர் 15 தொடக்கம் 19 வரை கொழும்பில் நடாத்தப்படவுள்ளது. 2014 செப்ரெம்பர் 15 ஆம் திகதியன்று ஆரம்ப விழா அதிமேதகைய சனாதிபதி அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. அஞ்சல் சேவைகள் அமைச்சர் மாண்புமிகு ஜீவன் குமாரணதுங்க அவர்களினால் மேற்போந்த தகவல்கள் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டன. |