2014-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
“சமூக மற்றும் நீர் சேவை" பற்றிய 3 ஆவது சருவதேச மாநாடு - 2014 ஆகஸ்ட் - மேற்போந்த மாநாடு நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் 2014 ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை கண்டியில் நடாத்தப்படவுள்ளதுடன் இதற்காக இந்தியா, வங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், ஆப்கானிஸ்தான் மற்றும் மாலைதீவு போன்ற இந்த வலயத்திற்கு உட்பட்ட பல நாடுகள் கலந்து கொள்ளுமென எதிர்பார்க்கப் படுகின்றது. தங்களது நீர் வழங்கல் முறையிலுள்ள போதான முகாமைத்துவ அறிவு, திறமுறை அத்துடன் சிறந்த அனுபவங்களை பரிமாறிக் கொள்ளுதல். சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடல், புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கு வழிவகை செய்தல் இந்த மாநாட்டின் நோக்கமாகும். பல்வேறுபட்ட சமூக அடிப்படை அமைப்புக்கள் கொள்கை வகுப்போர், ஆய்வாளர்கள், கல்விமான்கள் ஐக்கிய நாடுகள் சபையின் முகவராண்மை அத்துடன் 500 சர்வதேச அபிவிருத்தி நிறுவனங்கள் போன்றவற்றின் முகவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படுகின்றது. நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |