• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்

- நாட்டின் வீதி முறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் பிரதான நகரங்கள் சருவதேச விமானநிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று இணைப்பதற்கு அரசாங்கத்தினால் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதோடு, கிராமிய வீதிகளை இணைப்பதற்கான முதலீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அனைத்து கிராமங்களையும் நாட்டின் வீதி வலையமைப்புடன் தொடர்புபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சனத்தொகை மற்றும் அபிவிருத்தி வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு கிராமிய மைய நிலையங்களாக 1,000 கிராமங்கள் தெரிவு செய்யப்படும். 800 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட தொகையை வழங்குவதன் மூலம் பின்வருமாறு ஐந்து கருத்திட்டங்கள் மூலம் ஐந்து மாகாணங்களில் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. மொத்த நிகழ்ச்சித்திட்டத்திற்கான அரசாங்கத்தின் பங்களிப்பு 106 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும்.

* கருத்திட்டம் 1 - தென் மாகாணம்
* கருத்திட்டம் 2 - சப்பிரகமுவ மாகாணம், மேல்மாகாணத்தின் களுத்துறை மாவட்டம்
* கருத்திட்டம் 3 - மத்திய மாகாணம்
* கருத்திட்டம் 4 - வடமத்திய மாகாணம்
* கருத்திட்டம் 5 - வடமேல் மாகாணம்

ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் செய்யப்படவுள்ள மேற்போந்த கடன் தொகைக்குரிய தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்தவற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.