• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெதுறுஓயா நீர்த்தேக்க கருத்திட்டத்தின் மையப்படுத்திய கட்டுப்பாடுடனான ரேடியல் கதவுகள் முறைமையை மின்சாரத்தின் ஊடாக கட்டுப்படுத்துதல்

- தெதுறுஓயா நீர்த்தேக்க கருத்திட்டம் குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் சுமார் 50,000 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காகவும் சுமார் 30,000 ஏக்கர் வயற்காணிகளுக்கு நீர்ப்பாசனம் வழங்குவதற்காகவும் நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப் படுகின்றது. நவீன தொழினுட்ப முறைகளைப் பயன்படுத்தி தெதுறுஓயா நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளுக்கு மையப்படுத்திய கட்டுப்பாடுடனான ரேடியல் கதவுகள் முறைமையொன்றை பொருத்துவதற்கான நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சர் மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.