2014-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உள்நாட்டு சந்தையில் தெங்கு மற்றும் அதுசார்ந்த உற்பத்திப் பொருட்களுக்கு முறையான சந்தையொன்றை உருவாக்கும் கருத்திட்டம் - தற்போது இலங்கையில் அண்ணளவாக 150 தெங்கு மற்றும் அதுசார்ந்த உற்பத்திப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதோடு, வருடாந்தம் அண்ணளவாக 50 பில்லியன் ரூபாவைக் கொண்ட அந்நிய செலாவணியை ஈட்டி, இவற்றுள் தெரிவு செய்யப்பட்ட 50 உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உள்நாட்டு சந்தையை விருத்தி செய்யும் நோக்கில் இந்த உற்பத்தியாளர்களினால் உற்பத்தி செய்யப்படும் தும்பு மெத்தை, தும்புத்தடி, பாப்பிஸ், பிரஸ் போன்றவை அரசாங்க நிறுவனங்களுக்குத் தேவையான மொத்த அளவில் ஏதேனும் நூற்றுவீதமொன்றை தெங்கு அபிவிருத்தி சபையின் ஊடாக விநியோகிப்பதற்காக தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு ஜகத் புஷ்பகுமார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பு தொடர்பில் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தெங்கு அபிவிருத்தி சபையின் ஊடாக அவர்களுடைய விலையை முன்வைத்த உள்நாட்டு தொழில் முயற்சியாளர்களுக்கு 10 சதவீத முன்னுரிமையை வழங்குவதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது. |